பக்கங்கள்

திங்கள், 21 ஏப்ரல், 2014

தொப்பையை குறைக்க 14 எளிமையான வழிகள்.


வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை(நவீன விரைவு உணவுகள்) தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பைத் தவிர்க்கவும்: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ(Avocado): அவகேடோவிலும்(அவகேடோ பழம்) உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை(புளிப்புள்ள பழங்களை) அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.


7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்(Salmon Fish): சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.


10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள்(நாவற்பழம், செர்ரி, ஸ்ட்ராபெரி போன்றவை) கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.


12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது. 


திங்கள், 7 ஏப்ரல், 2014

சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...


குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?
அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க  விடவும்.
பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2  அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.
சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல் அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான  பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.
அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான  விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை

கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள்  சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

ரத்த  ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு,  தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.
தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.

வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை

பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.
அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு.  உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக்  கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.
வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத்  தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில்,  வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.
அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து  உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ,  சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.
அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான  உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில்  அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.
வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது.  அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

செவ்வாய், 19 நவம்பர், 2013

ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்


உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.
இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
தினசரி இரவு  அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம்  விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால்  ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால்  ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.



கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
கொள்ளின் பலன்கள்
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.
சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.
உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து  இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும்,  கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

புதன், 5 டிசம்பர், 2012

Do you want boost your Heart?

If you want to boost your heart health, start by changing what’s on your plate. Making simple tweaks could have big benefits.
  • Believe the hype. You've heard a lot about eating heart-healthy, but does it really matter? Yes. One study of more than 42,000 healthy women found that those who ate a healthy diet -- with an emphasis on vegetables, lean meats, grains, and low-fat dairy -- were 31% less likely to die in the next 6 years than women with unhealthy diets.
  • Don't diet. A crash diet may work if you're trying to fit into a dress by next month. But if you're trying to improve your heart health, cycling through different fad diets won't help. Diets that demonize one type of food -- whether it's carbs or fat -- don't work either. Instead, take a sensible approach. Focus on lean meats, vegetables, and whole grains to get long-term benefits for your heart and your waistline.   
  • Don't gorge yourself. Obviously, overeating will cause you to gain weight. That's not all. Studies have found that more people have heart attacks after big meals.
  • Sea salt is still salt. Most Americans think sea salt is a low-sodium alternative to regular table salt. Wrong. It has the same amount of sodium. Any type of salt increases your blood pressure. You probably need to eat less salt; most people do. The guideline is no more than a teaspoon a day. If you already have high blood pressure, you should eat even less. And, it doesn’t just come from the salt shaker. Up to 75% of the salt you consume comes from processed foods such as soups and frozen meals. If your food comes in a can or a box, check the sodium content. 
  • Avoid caffeine. If you have atrial fibrillation, caffeine and other stimulants can trigger symptoms.
  • A little wine may be good, but a lot is not. Yes, studies show that drinking modest amounts of alcohol -- not just wine -- has heart benefits. But don't assume that if a glass is good, a jug must be better. Excess alcohol -- more than one drink a day for women or two for men -- increases your risk for heart problems. It drives up blood pressure and can trigger irregular heartbeats in people with atrial fibrillation.
  • Choose meats wisely. Red meat is usually high in saturated fat, which is bad for your heart. That doesn't mean you have to banish meat from your diet. Just be savvy. Choose the leanest cuts and always cut off the fat. Look for cuts such as sirloin, flank, rump roast, and tenderloin. Or, choose pork tenderloin, turkey or chicken breast, as an alternative.
  • Add more fish to your diet. You probably know that fish is good for you -- but not all fish is equal. Deep-fried cod doesn't count. Instead, grill or roast fish that is high in healthy omega-3 fatty acids, such as salmon, tuna, trout, and sardines.
  • Eat whole grains. What's so special about whole grains? They help control your blood sugar, reducing your risk of diabetes by 20% to 30%. People who eat a lot of whole grains tend to weigh less, too. Go for whole-wheat breads, brown rice, wild rice, oatmeal, cornmeal, barley, and rye.
  • Eat less deli. Think that a smoked turkey sandwich is a healthier choice than a burger? Don't be so sure. Deli meats are often packed with salts, nitrates, and preservatives that can be bad for your heart. Instead, go for whole chicken breasts or in-house roasted turkey.
  • Eat less when eating out. Experts say we're eating too many calories. Restaurant portion sizes may have a lot to do with it. According to the CDC, the amount of food in one average restaurant meal today is like four average restaurant meals from the 1950s. Studies have also found that the bigger the portion served, the more we'll eat. The solution? Get in the habit of only eating half of what's on your plate. You can take the rest home.
  • Fill up on fiber. Fiber absorbs fat during digestion and reduces swelling in your arteries. It also helps with weight control because it makes you feel full faster -- and improves your digestive health. What's not to like? Fruit, vegetables, nuts, and beans are all good sources of fiber.
  • Note: If you have atrial fibrillation or another condition treated with an anticoagulant like Coumadin (warfarin), be on the alert for vegetables with vitamin K. This vitamin can reduce the drug's effectiveness. Veggies with vitamin K include Brussels sprouts, cabbage, collard greens, kale, mustard greens, spinach, and turnip greens. If you eat these foods, keep the amount you eat about the same from day to day. If you want to add any of these foods to your diet, talk to your doctor first. You may be able to introduce small amounts slowly.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

உடற் பயிற்சியின் அவசியம்




ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ அல்லது வேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். முகம் கூடுதல் அழகுடனும் காணப்படும்.
இளம் வயதில்  செய்யப்படும் உடற்பயிற்சி மிகுந்த நன்மை பயக்கும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான மன அழுத்தம் குறையும் இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் பல விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதச் சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான விட்டமின்களை எடுத்துக் கொள்ளாமல் போனால் ஆராக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த விட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.40 வயதை எட்டிவிட்டால் நோய்களும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விடும். பல உடல் உபாதைகள் எட்டிப் பார்க்க தொடங்கி விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சினைகளின் தொடக்கம் 40 வயதுதான். நீங்கள் காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வதன்  மூலம் உங்கள் கால்களை திடப்படுத்த முடியும் 40 வயதில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ எவ்வளவு உடற்பயிற்சி செய்தீர்களோ அதை பொறுத்துதான் அமைகிறது என்கின்றனர்.
மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைப்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

சனி, 19 மார்ச், 2011

புகை பிடித்தலும், இருதயமும்

 
மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது.  45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப் புகளில், 80 சதவிகிதம் புகைபிடிப்பவருக்கே வரு கிறது.  புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டி லிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகை பிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந் தாலும், அவர்க-ளுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக் கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது.

உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவிகிதம் புகை பிடிப்பதாலேயே ஏற்படுகின்றன.

சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள்கள் கலந்துள்ளன.  இவற்றில் முக்கியமான இரண்டு பொருள்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்பு களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1. நிக்கோட்டின்

2. கார்பன் மோனாக்சைடு

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும்.  இதனால் அவ்வுறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைப் படுகிறது.

ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக் குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக் குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது.  கொழுப்புச் சத்து படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.  இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக் குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்புச் சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது.

தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப் பையும், எடுத்துச் செல்லும் இவை, நேராக ரத்தக் குழாயில் படிய வைக்கின்றன.  டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல.

இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கி விட்டு, அந்த இடத்தில்தான் போய் அமர்ந்து கொள்கிறது.  இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது.

சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்கப் பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன.

இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும் பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்க விளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதயத் தசை மிகவும் பல்வீனமாகலாம்http://viduthalai.in/new/page6/5721.html